இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை கொண்டவர் . பல நற்பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் கொடைக்கானலில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீக்கு எதிரான விழிப்புணர்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்தி .
அதில் அவர் பேசியதாவது "கோடை வெயிலுக்கு இதமளிக்கிற இயற்கை தந்த கொடை கொடைக்கானல். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இது ஒரு கனவு பிரதேசம். வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் என பல உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன . இது நெருப்புகாலம் என்பதால் எளிதில் பற்றிக்கொள்ளும் நிலைமையில் காடு இருக்கிறது. சிறு தீப்பொறி பட்டால் போதும் காடோடு சேர்ந்து மரங்கள், பறவைகள் என அனைத்தும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிராக இந்த போரில் வனத்துறையினருடன் இணைந்திருப்போம் என்று கார்த்தி வீடியோவில் கூறியுள்ளார் .